Friday, July 1, 2011

மனிதனே கடவுள்

மனித மனத்திலே
ஈரம் இல்லை
கல் உருவத்திலா
இருக்கப்போகிறது..

கல் சிலைக்கே
நகைகளை அணிவித்து
அலங்கரிக்கும் மனிதனுக்கு,
சிலை எப்படி
பொன்னும் பொருளும்
அளிக்கும்

என்னை அவன்
காப்பாற்றுகிறானோ இல்லையோ
அவன் அணிகலன்களை -
நாட்டின் சொத்துக்களை
நாம் காப்பாற்றியாக வேண்டும்

சினிமா, விளையாட்டு,
டி.வி.... போல
கோயிலும், திருவிழாவும்
பொழுதுபோக்கும் விதமாக
கண்டிப்பாக மாற வேண்டும்

2 comments:

Balabharathi said...

neengal nandraga kavithai ezthukirigal enbathu enaku theriyathu

கதிரவன் said...

நன்றி