Thursday, July 14, 2011

மழை

தினம்
மழை வேண்டி
வானம் பார்த்து
ஏங்கினேன்.
இரவில் தூக்கமில்லை
வீட்டில்
குளிர் சாதன பெட்டி
இல்லாததால்

Tuesday, July 12, 2011

கோயிலில் கூட்டம்

நாலு பேர்
கூடினால் அதை
எட்டிப்பார்ப்பது
தமிழன் மரபாகிவிட்டது.
கோயிலின்
திருவிழாவுக்கு நாம்
செல்வது இதனால்தான்.

Friday, July 1, 2011

மனிதனே கடவுள்

மனித மனத்திலே
ஈரம் இல்லை
கல் உருவத்திலா
இருக்கப்போகிறது..

கல் சிலைக்கே
நகைகளை அணிவித்து
அலங்கரிக்கும் மனிதனுக்கு,
சிலை எப்படி
பொன்னும் பொருளும்
அளிக்கும்

என்னை அவன்
காப்பாற்றுகிறானோ இல்லையோ
அவன் அணிகலன்களை -
நாட்டின் சொத்துக்களை
நாம் காப்பாற்றியாக வேண்டும்

சினிமா, விளையாட்டு,
டி.வி.... போல
கோயிலும், திருவிழாவும்
பொழுதுபோக்கும் விதமாக
கண்டிப்பாக மாற வேண்டும்