Sunday, April 24, 2011


ஆனந்தத்தை
ஆக்கிரமித்த
ஆனந்தியே...

அன்போடு
அரவணைக்க
ஆசைதான்.

அப்போது - உன்
அதரங்கள்
அணைத்தால்...

அந்நாள்
எந்நாள் - அது என்
பொன்நாள்

கண்ணால்
நீ
அழைத்தால்
நான்
மனதால்
துள்ளுவேன்
இன்பத்தால்

உன்னை
அள்ளித்தான்
கிள்ளித்தான்
உன்னுடன்
துள்ளித்தான்...

ஆஹா!
இதை
எண்ணித்தான்

என்
மனம்தான்
கொண்டாடும்
பின்
திண்டாடும்

நீ
கன்னித்தான்
என்
கனவு கன்னிதான்.
என்றும்தான்
நீ என்
அருகில்தான்.

இதைச் சொல்லித்தான்
உனைச்
சுற்றித்தான்
தினம் தினம்
வரும்
என் நெஞ்சம்தான்.

No comments: