தினம்
மழை வேண்டி
வானம் பார்த்து
ஏங்கினேன்.
இரவில் தூக்கமில்லை
வீட்டில்
குளிர் சாதன பெட்டி
இல்லாததால்
Thursday, July 14, 2011
Tuesday, July 12, 2011
கோயிலில் கூட்டம்
நாலு பேர்
கூடினால் அதை
எட்டிப்பார்ப்பது
தமிழன் மரபாகிவிட்டது.
கோயிலின்
திருவிழாவுக்கு நாம்
செல்வது இதனால்தான்.
கூடினால் அதை
எட்டிப்பார்ப்பது
தமிழன் மரபாகிவிட்டது.
கோயிலின்
திருவிழாவுக்கு நாம்
செல்வது இதனால்தான்.
Friday, July 1, 2011
மனிதனே கடவுள்
மனித மனத்திலே
ஈரம் இல்லை
கல் உருவத்திலா
இருக்கப்போகிறது..
கல் சிலைக்கே
நகைகளை அணிவித்து
அலங்கரிக்கும் மனிதனுக்கு,
சிலை எப்படி
பொன்னும் பொருளும்
அளிக்கும்
என்னை அவன்
காப்பாற்றுகிறானோ இல்லையோ
அவன் அணிகலன்களை -
நாட்டின் சொத்துக்களை
நாம் காப்பாற்றியாக வேண்டும்
சினிமா, விளையாட்டு,
டி.வி.... போல
கோயிலும், திருவிழாவும்
பொழுதுபோக்கும் விதமாக
கண்டிப்பாக மாற வேண்டும்
ஈரம் இல்லை
கல் உருவத்திலா
இருக்கப்போகிறது..
கல் சிலைக்கே
நகைகளை அணிவித்து
அலங்கரிக்கும் மனிதனுக்கு,
சிலை எப்படி
பொன்னும் பொருளும்
அளிக்கும்
என்னை அவன்
காப்பாற்றுகிறானோ இல்லையோ
அவன் அணிகலன்களை -
நாட்டின் சொத்துக்களை
நாம் காப்பாற்றியாக வேண்டும்
சினிமா, விளையாட்டு,
டி.வி.... போல
கோயிலும், திருவிழாவும்
பொழுதுபோக்கும் விதமாக
கண்டிப்பாக மாற வேண்டும்
Sunday, April 24, 2011
ஆனந்தத்தை
ஆக்கிரமித்த
ஆனந்தியே...
அன்போடு
அரவணைக்க
ஆசைதான்.
அப்போது - உன்
அதரங்கள்
அணைத்தால்...
அந்நாள்
எந்நாள் - அது என்
பொன்நாள்
கண்ணால்
நீ
அழைத்தால்
நான்
மனதால்
துள்ளுவேன்
இன்பத்தால்
உன்னை
அள்ளித்தான்
கிள்ளித்தான்
உன்னுடன்
துள்ளித்தான்...
ஆஹா!
இதை
எண்ணித்தான்
என்
மனம்தான்
கொண்டாடும்
பின்
திண்டாடும்
நீ
கன்னித்தான்
என்
கனவு கன்னிதான்.
என்றும்தான்
நீ என்
அருகில்தான்.
இதைச் சொல்லித்தான்
உனைச்
சுற்றித்தான்
தினம் தினம்
வரும்
என் நெஞ்சம்தான்.
Saturday, April 16, 2011
என் உயிர்
உன்னிடத்தில்...
உன் அழகையும்
வனப்பையும்
நினைத்தாலே
பி.பி. ஏறுகிறது...
என்னைவிட்டு
நீ பிரிந்துவிடுவாயோ..
எனக்கு
ஹார்ட் அட்டாக் வரும்...
உன் நினைவால்
பசியில்லை
சாப்பிட முடியவில்லை
அல்சர்...
உன்னை
நினைத்து நினைத்தே
உடல் மெலிந்தேன்
இரத்த சோகை...
உன்னுடன்
ஊர் சுற்றிய காலங்களில்
நிறைய ஐஸ் க்ரீம்
சாப்பிட்டது - ஜலதோஷம்
சைனஸ்...
உன்னுடன் இணைந்தேன்
சந்தோஷம்
உடல் பருமன்
கொலஸ்ட்ரால்
ஆம்...
என் உயிர்
உன்னிடத்தில்...
Friday, February 25, 2011
Monday, January 17, 2011
இதயம் ஒரு கோயில்...
வாழ்வில் நான் பாவி
எனை மாற்று நீ தேவி
உந்தன் இதயம் தேடினேன்
மனமே பாடு உனை வேண்டியே...
எங்கெங்கும் ஜோடி ஜோடி
எதிலும் உண்மை இல்லை.
கதலரும் பல கோடி
அதிலும் நேர்மை இல்லை
எனது காதல் ஒன்றுதான்
இன்றும் இனிது...
வாழ்வே நீயென சொன்னாள்
பின் பிரிவே இனிமை என்றாள்
இனி சோகம்தானே கண்ணே
மனமே பாடு உனை வேண்டியா..
உனது ஜாதி வேறு
எனது ஜாதி வேறம்மா
பெற்றோர்கள் எண்ணம் மாறவே
என் காதலி பிரிந்தாளே
வீழ்க நம்மை பிரித்தோர்கள்
மனதால் இனைந்தோமே
எனை மாற்று நீ தேவி
உந்தன் இதயம் தேடினேன்
மனமே பாடு உனை வேண்டியே...
எங்கெங்கும் ஜோடி ஜோடி
எதிலும் உண்மை இல்லை.
கதலரும் பல கோடி
அதிலும் நேர்மை இல்லை
எனது காதல் ஒன்றுதான்
இன்றும் இனிது...
வாழ்வே நீயென சொன்னாள்
பின் பிரிவே இனிமை என்றாள்
இனி சோகம்தானே கண்ணே
மனமே பாடு உனை வேண்டியா..
உனது ஜாதி வேறு
எனது ஜாதி வேறம்மா
பெற்றோர்கள் எண்ணம் மாறவே
என் காதலி பிரிந்தாளே
வீழ்க நம்மை பிரித்தோர்கள்
மனதால் இனைந்தோமே
Subscribe to:
Posts (Atom)