Tuesday, June 23, 2009

வாழ்வே நீயென சொன்னாள்
பின் பிரிவே இனிமை என்றாள்
இனி சோகம்தானே கண்ணே
மனமே பாடு உன்னை வேண்டியே !
நெஞ்சு கொடி கழுத்தில்
இறந்தது சிசு
வயிற்றில்.
காரணம்,
கர்ப்பம் தரித்தவுடன்
குல தெய்வத்தின் கோயில் சென்று
கடவுளுக்கு
பொங்கல் வைக்கவில்லை.
சாமியின் சாபம்,
சிசுவை கொன்றது
கடவுள் !
இல்லை... இல்லை...
அரக்கன் !